வரும் 22-ம் தேதி முதல் புதிய மலையாள படங்களை திரையிடமாட்டோம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளாவில் வரும் 22-ம் தேதி முதல் புதிய மலையாள படங்களை திரையிடப் போவதில்லை என அம்மாநில திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். மலையாள படங்களை ஓ.டி.டி.யில் வெளியிடும் முடிவில் கேரள தியேட்டர் அதிபர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. புதிய படங்கள் தியேட்டரில் வெளியாகி 42 நாட்களுக்கு பிறகுதான் ஓ.டி.டி.யில் வெளியிட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் நிபந்தனை விதித்து உள்ளனர். ஆனால் இந்த நிபந்தனையை சில தயாரிப்பாளர்கள் மதிக்காமல் அடிக்கடி மீறி வருவதாக சர்ச்சைகள் கிளம்பியதை அடுத்து, திரையரங்கு உரிமையாளர்கள் இந்த முடிவைஎடுத்துள்ளனர். 

Night
Day