விஜய்க்கும், தனக்கும் போட்டி என கூறுவது கவலை அளிக்கிறது - ரஜினி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் விஜய்க்கும், தனக்கும் போட்டி என கூறுவது கவலை அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தில் ரஜினி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தாம்பரத்தில் நேற்று நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினி, தனக்கும், விஜய்க்கும் போட்டி என கூறுவது கவலை அளிக்கிறது என்றார். விஜய்க்கு தான் போட்டி என நினைத்தால் அது தனக்கு மரியாதை இல்லை என்றும் அவர் கூறினார். காக்கா, கழுகு கதையை ரசிகர்கள் இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Night
Day