‘டிமாண்டி காலனி - 2’ திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டிமாண்டி காலனி பேன்ஸ்க்கு ஒரு சூப்பரான அப்டேட் கிடைச்சிருக்கு. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனந்த், அபிசேக் ஜோசப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானதுதான் டி மாண்டி காலணி திரைப்படம்.  விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டத்துல் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்தார்.  பார்ட் -2  ’எப்போடா வெளியாகும்’ என்று எதிர்பார்த்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு உற்சாகம் ஊட்டக்கூடிய வகையில ‘டிமாண்டி காலனி - பார்ட் 2’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என படகுழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர்  நடித்துள்ளனர். இந்த படம் வெளியாக இருக்கம் அதே ஆகஸ்ட் 15ஆம் தேதி விக்ரமின் தங்கலான், கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா, பிரசந்தின் அந்தகன் என மொத்தம் 4 படங்கள் வெளியாகவுள்ளதால் இந்த சுதந்திர தினம் சினிமா ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்குனு சொல்லலாம்

Night
Day