"அம்மா" வழியில் "புரட்சித்தாய் சின்னம்மா"

எழுத்தின் அளவு: அ+ அ-

மக்கள் நலன் ஒன்றையே, தமது உயிர் மூச்சாகக் கொண்டு, தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட, புரட்சித்தலைவி அம்மா, தமது அரசியல் பயணத்தில் எத்தனையோ சோதனைகளைக் கடந்து மகத்தான வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனைகளை படைத்துள்ளார். மாண்புமிகு அம்மாவின் தாயாய், தோழியாய், சகோதரியாய் 33 ஆண்டுகள், கண்ணை இமை காப்பதுபோல் அம்மாவைக் காத்து தனது சுக துக்கங்களை மறந்தவர்... அம்மாவுக்காகவே தன் வாழ்வைத் துறந்தவர், புரட்சித்தாய் சின்னம்மா.

தமிழக மக்கள் நலனுக்காக மாண்புமிகு அம்மா செயல்படுத்திய நலத்திட்டங்கள் எண்ணிலடங்காதவை. அனைத்து தரப்பு மக்களின் நல்வாழ்வுக்காக, அம்மா கொண்டுவந்த நலத்திட்டங்கள் ஒவ்வொன்றிலும் புரட்சித்தாய் சின்னம்மாவின் ஆலோசனைகளும் பங்குபணிகளும் பொதிந்து இருப்பதை அனைவரும் அறிவோம்.

மாண்புமிகு அம்மாவின் மக்கள் நலத்திட்டம் ஒவ்வொன்றும் மக்களின் நீண்டநாள் நன்மைக்காக வடிவமைக்கப்பட்டது - தொலைநோக்கு சிந்தனையுடன் கூடியது - அனைத்து தரப்பினருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவது - சமுதாயத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு வழிவகுப்பது என்றால் அது மிகையாகாது.

அழியாச் செல்வமான கல்வியை சாதி, மத, வர்க்க பேதமின்றி அனைவருக்கும் அளிக்கும் வகையில் புரட்சித்தலைவி அம்மா செயல்படுத்திய முன்னோடித் திட்டங்கள் கல்வி வளர்ச்சியில் தமிழகத்தை, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உயர்த்தியது. உயர்கல்வியில் மாணவ, மாணவியர் சேர்க்கையும் பன்மடங்கு அதிகரித்தது. இத்தகைய மகத்தான வளர்ச்சிக்கு காரணம், மாண்புமிகு அம்மாவின் அரசு நிறைவேற்றிய பல்வேறு முன்னேற்றத் திட்டங்கள்தான் என்று உறுதிபடக் கூறலாம்.

அனைவருக்கும் தரமான கல்வி, மாணவர்கள் கற்கும் திறனை மேம்படுத்த போதுமான அளவில் ஆசிரியர்கள், வறுமை உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் இடை நிற்றலைத் தடுக்க சிறப்பு ஊக்கத் தொகை... இப்படி வியக்க வைக்கும் எண்ணற்ற திட்டங்களால், மாண்புமிகு அம்மாவின் ஆட்சியில் கல்வியில் சிறந்தது தமிழ்நாடு.

பள்ளிக்கூட மாணவ, மாணவியருக்கு, விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், படிப்பு உபகரணங்கள், சீருடைகள், மடிக்கணினி, பள்ளிக்குச் சென்றுவர மிதிவண்டிகள், இப்படி, கல்வி வளர்ச்சிக்காக புரட்சித்தலைவி அம்மா செயல்படுத்திய நல்ல பல திட்டங்கள் நாடு முழுவதும் சிறப்பான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றன. மாணவ, மாணவியருக்கான நலத் திட்டங்கள் எப்படி உருவாகின? என்பதை, புரட்சித்தலைவி அம்மாவின் அருகில் இருந்து ஆலோசனைகள் வழங்கிய புரட்சித்தாய் சின்னம்மாவே எடுத்துக் கூறுகிறார்.

வறுமை நிலையிலும் கல்வி பயிலும் ஏழைப் பெண்களுக்கு, திருமணத்தின்போது, தாலிக்குத் தங்கம் மற்றும் நிதி உதவியுடன் கூடிய திருமண உதவித் திட்டம், கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில் விலையில்லா ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கு சமூக வளைகாப்பு திட்டம், குழந்தைகளுக்கான சத்துணவு திட்டத்தில், சத்துணவு உருண்டைகள் விநியோகம், கருவுற்ற பெண்களுக்கு பேறுகால உதவித் திட்டம், குழந்தைகள் நலப் பெட்டகம், பாலூட்டும் தாய்மார்களுக்கு பேருந்து நிலையம் மற்றும் பொது இடங்களில் தனி இட வசதி, இல்லத்தரசிகளுக்கான வீட்டு வசதிகளைப் பெருக்கும் வகையில் விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் திட்டம்... இப்படி அம்மா செயல்படுத்திய ஒவ்வொரு நலத்திட்டத்திலும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற்றதோடு, தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் பன்மடங்கு உயர்ந்தது.

ஆவின் பால் விநியோகத்தில் தற்போதைய திமுக ஆட்சியில் பல்வேறு குழப்பங்களும் குளறுபடிகளும் ஏற்பட்டு முறைகேடுகள் நடைபெறும் நிலையில், மாண்புமிகு அம்மா ஆட்சிக்காலத்தில் ஆவின் பால் உற்பத்தி, விநியோகம் ஆகியன எவ்வளவு சிறப்பாக இருந்தன? என்பதை நாட்டு மக்ள் நன்கு அறிவார்கள். ஒரு சிறப்பான வெண்மைப் புரட்சி, அம்மா ஆட்சியில் ஏற்பட்டது. மாண்புமிகு அம்மாவின் மக்கள் நலத் திட்டம் ஒவ்வொன்றும் எந்த அளவுக்கு பயனுள்ள திட்டங்களாக அமைந்திருந்தன? என்பதை எடுத்துரைக்கிறார் புரட்சித்தாய் சின்னம்மா.

ஏழை, எளிய மக்கள், கூலித் தொழிலாளர்கள், நிரந்தர வேலையில்லாமல், அன்றாடம் கிடைக்கின்ற வேலையைச் செய்யும் தொழிலாளர்கள்... இப்படி நலிந்த பிரிவினர் மிகக் குறைந்த செலவில் காலைச் சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு ஆகியவற்றை உண்ணும் வகையிலான அம்மா உணவகம் - பெண் சிசு வதையைத் தடுத்து, பெண் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கான தொட்டில் குழந்தை திட்டம், கோயில்களில் சுவாமி தரிசனம் செய்யவரும் பக்தர்கள் பசியைப் போக்கும் வகையில் அறுசுவை உணவளிக்கும் திருக்கோயில் அன்னதான திட்டம், தரமான மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும் அம்மா மருந்தகம், ஏழை, எளிய மக்கள் வீடுகட்டிக்கொள்ள குறைந்த விலையில் சிமெண்ட் வழங்குவதற்கான அம்மா சிமெண்ட் திட்டம், ஏழை, எளிய மக்களுக்கான பசுமை வீடுகள் திட்டம், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் குடும்ப நலனுக்கான உழவர் பாதுகாப்பு திட்டம் இப்படி புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்காலத்தில் அவர் செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்கள் ஏராளம்... ஏராளம்...

இதன் அடிப்படையில்தான், மாண்புமிகு அம்மாவின் பொற்கால ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் மலரச் செய்யவேண்டும் என்ற சூளுரையோடு, கழகத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தி, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து செயல்படுகிறார் புரட்சித்தாய் சின்னம்மா.




Night
Day