"இடைத்தேர்தலில் ஆளும் திமுகவை தோற்கடிக்க வேண்டும்" - நடிகர் சரத்குமார் ஆவேசம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆட்சியும், காட்சியும் மாற வேண்டும் என்றால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆளும் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து பாஜகவை சேர்ந்த திரைப்பட நடிகர் சரத்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், ஒரு அரசிற்கும், காவல்துறைக்கும் தெரியாமல் கள்ளச்சாராயம் விற்க முடியுமா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும் என ஆவேசமாக கூறினார். 

Night
Day