"கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்" - தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் வெயிலின் தாக்கம் குறைந்ததால் கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் தங்களது கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோடை வெயில் தினந்தோறும் 100 டிகிரிக்கு மேல் கொளுத்தி வருகிறது. கடும் வெயிலின் தாக்கதால் கட்டிட தொழிலாளர்கள் சிலர் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு உயிரிழந்தனர். இதனால், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமான பணிகளை மேற்கொள்ளக் கூடாது என, அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கு தொழிலக பாதுகாப்பு இயக்ககம் நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில், வெயில் தாக்கம் குறைந்ததால் கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் தங்களது கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. வெப்ப அலை விளைவுகள் மீண்டும் அதிகரித்து, அதன் உச்சத்தை அடையும் வரை வழக்கம் போல் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Night
Day