"சாராயம் விற்பனை செய்து சிறைக்கு சென்று வந்தவர்தான் அமைச்சர் காந்தி" - அண்ணாமலை விமர்சனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சாராயம் விற்பனை செய்து சிறைக்கு சென்று வந்தவர் தான் அமைச்சர் காந்தி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் என் மண், என் மக்கள் யாத்திரை மேற்கொண்டுள்ள அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், 1994ம் ஆண்டு சாராய வியாபாரம் செய்து சிறைக்கு சென்று வந்தவர் தான் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி என விமர்சனம் செய்தார்.  3வது முறையாக பிரதமர் மோடி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தால் பல லட்சம் கோடி ரூபாய் செலவில் நதிகள் இணைப்பு நிறைவேறும் என அண்ணாமலை உறுதியளித்தார். 

Night
Day