"சின்னம்மா உதவியால் பழக்கடை அமைத்துள்ளேன்"- மக்கள் பயணத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தேவர்குளத்தில் புரட்சித்தாய் சின்னம்மா உரையாற்றிய பின்னர், அங்கிருந்து அவர் புறப்பட்டபோது அங்கு, 'சின்னம்மா பழமுதிர்ச்சோலை' என்ற பெயரில் பழக்கடை நடத்திவரும் பிரேம் ஆனந்த் என்பவர், சின்னம்மாவிடம் தனது கடையைக் காட்டி, சின்னம்மா அளித்த உதவியினால் அந்த கடையை தான் அமைத்ததாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.  புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளை ஒட்டி, புரட்சித்தாய் சின்னம்மா, அவருக்கு கரும்புச்சாறு இயந்திரம் வழங்கினார். அந்த உதவியைக் கொண்டு, தான் ஆரம்பித்த கடை தான், 'சின்னம்மா பழமுதிர்ச்சோலை' என பிரேம் ஆனந்த் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதுகுறித்து மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்த புரட்சித்தாய் சின்னம்மா, அவர் மென்மேலும் வளர தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 

Night
Day