"நீங்கள் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதற்கு முதல்வர் பணம் செலுத்துகிறார்" - அமைச்சர் சர்ச்சை பேச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீங்கள் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதற்கு முதல்வர் ஸ்டாலின்தான் பணம் செலுத்துகிறார் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் பாளையம்பட்டியில் அரசு நிகழ்ச்சியில் பேசிய அவர், நீங்கள் பேருந்தில் ஏறிவிட்டு டிக்கெட் எடுப்பது இல்லை என்றும், அந்த டிக்கெட்டுகளுக்கு முதல்வர்தான் பணம் செலுத்துவதாகவும் தெரிவித்தார். மேலும், இதுவரைக்கும் 40 கோடி பேர் இதுபோன்று பயணித்திருப்பதாகவும், அந்த 40 கோடி பேருக்கும் ஸ்டாலின்தான் பணம் கட்டினார் என்றும் அமைச்சர் கூறினார். பேருந்தில் இலவசமாக பயணிக்கும் பெண்களை இழிவு படுத்தும் விதமாக அமைச்சர் பேசியுள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day