"பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் அழைப்பின் பேரில் பேசினேன்" - மகாவிஷ்ணு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு, அசோக் நகர் அரசு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரும் தன்னார்வலருமான காமாட்சி என்பவர் அழைத்ததின் பேரில் பள்ளியில் பேசியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சைதாப்பேட்டை போலீசாரின் விசாரணையில், அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க நிதிக்கு ஒரு லட்சம் பணம் கொடுத்ததாகவும், சித்தர் ஒருவர் பேச சொன்னதால் தான் பேசியதாகவும் என திரும்ப திரும்ப மகாவிஷ்ணு சொல்லியதாக கூறப்படுகிறது.   இதனை தொடர்ந்து 3 நாள் காவல் விசாரணை நிறைவடையும் நிலையில் இன்று  மாலை 6 மணிக்குள் சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதியிடம்  மகாவிஷ்ணுவை போலீசார்  ஆஜர் படுத்த உள்ளனர்.

Night
Day