எழுத்தின் அளவு: அ+ அ- அ
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக ஊடகம் மூலம் ஆளுநருக்கு எதிராக தமிழக மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஆளுனர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், உச்சநீதிமன்றம் முன்பாக உள்ள அதன் விசாரணைக்கு புறம்பான ஒரு விஷயத்தில் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், ஒரு நாளிதழ் கொண்ட பார்வையின் போர்வையில், தனது சமூக ஊடக பக்கத்தின் மூலம் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டின் நான்காவது தூண், தனக்குப் பிடிக்காதவர்கள் மீது வண்ணமய விமர்சனங்களை சுமத்துவது உள்ளிட்ட சிறப்புரிமைகளைப் பெற்றிருப்பதற்கு காரணமான நமது அரசியலமைப்பு மற்றும் வலுவான கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்தும் சூழலுக்கு நன்றிகள் என குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், அரசியலமைப்பில் உயரிய பதவியில் வகிக்கும் முதலமைச்சர், நீதிமன்ற விசாரணைக்கு புறம்பாக அமையக்கூடிய விஷயத்தில் தனது அரசியலமைப்புப் பொறுப்பை அப்பட்டமாக மதிக்காமல், மிகவும் தரம் தாழ்ந்து முற்றிலும் பாதி உண்மைகள் மற்றும் பாரபட்சம் நிறைந்த ஒரு நாளிதழின் கருத்துக்களை தனது விரக்தியை வெளிப்படுத்துவதற்கான ஒரு ஊன்றுகோலாக, தனது முழுமையான நிர்வாகத் தோல்வியை மறைக்கவும், தனது அரசியல் பாதுகாப்பின்மையை மறைக்கவும் பயன்படுத்தியிருப்பது பரிதாபத்துக்குரியது என ஆளுனர் மாளிகை விமர்சித்துள்ளது.
ஆனால் தமிழ்நாட்டு மக்கள் முதலமைச்சர் நினைப்பதை விட மிகவும் புத்திசாலிகள் என ஆளுனர் மாளிகை தெரிவித்துள்ளது.