"முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" - பிரேமலதா விஜயகாந்த்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முதலமைச்சர் மருத்துவ சிகிச்சை எடுக்கவே வெளிநாடு பயணம் சென்றார் என்றும் அவரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிகவின் 20ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை கோயம்பேடு அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்ட சிலையை பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருமாவளவன் திமுக இடையே இருக்கும் பிரச்சனை அவர்கள் கூட்டணி சார்ந்த விஷயம், அதில் நாம் கருத்து கூற முடியாது என தெரிவித்தார். மேலும் முதலமைச்சர் மருத்துவ சிகிச்சை எடுக்கவே வெளிநாடு சென்றார் என்றும் அவரின் வெளிநாடு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கூறினார்.  

Night
Day