"15 வது ஊதிய உயர்வு குழு அமைக்க வேண்டும்" - போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் மார்ச் 6ம் தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் போக்குவரத்து தொழிற்சங்களுடன் 15வது ஊதிய ஒப்பந்தம், பழைய ஓய்வூதிய திட்டம், உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொழிலாளர் நல இணை ஆணையர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த சிஐடியு பொது செயலாளர் சௌந்தரராஜன், 15வது ஊதிய உயர்வு குழுவை அமைக்க வேண்டுமெனவும், இடைக்கால நிவாரணமாக 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார். 

Night
Day