'நான் இறக்கவில்லை' - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அப்துல் ஹமீது!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தான் இறந்துவிட்டதாக வெளியாகும் செய்திகள் தவறானவை என பிரபல இலங்கை வானொலி அறிவிப்பாளர் பி.எஸ்.அப்துல் ஹமீது விளக்கமளித்துள்ளார். தனித்துவமான குரல் உச்சரிப்பு, தமிழ்மொழியை அழுத்தம், திருத்தமாக பேசுவதன் மூலம் இலங்கை வானொலி அறிவிப்பாளர் பி.எஸ்.அப்துல் ஹமீது பிரபலமடைந்தார். அவர், உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இது வதந்தி என்று வீடியோ வெளியிட்டு அப்துல் ஹமீது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இலங்கையில் நலமுடன் இருப்பதாகவும், இச்செய்தி வெறும் வதந்தி என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பலர் தன்னை தொடர்புக் கொண்டு பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Night
Day