அஇஅதிமுகவுக்‍கு புரட்சித்தாய் சின்னம்மா தலைமையேற்க வலியுறுத்தல்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, அஇஅதிமுகவுக்கு தலைமைப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த ஆட்டயம்பாளையத்தில் கழக ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, அஇஅதிமுகவுக்கு தலைமைப் பொறுப்பு ஏற்க வேண்டும் - சின்னம்மா தலைமையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சியை அமைக்‍க வேண்டும் என இக்‍கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தொடர் தோல்வியில் இருந்து அஇஅதிமுகவை மீட்டு,‍ காப்பாற்றவும், வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்லவும் புரட்சித்தாய் சின்னம்மா, தலைமைப் பொறுப்பு ஏற்கவேண்டும் என, இக்‍கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் தெரிவித்தனர். 

இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகி டாக்டர் ஜி. செல்வகுமரன் முன்னிலையில், மாற்றுக்‍ கட்சிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், கழகத்தில் இணைந்தனர். 

நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் பாண்டியன், ஈரோடு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் சௌகத் அலி, சேலம் மாவட்ட பொறுப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சந்தோஷ், கௌதமன், திருப்பூர் மாநகர் பொறுப்பாளர் அரசு, திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Night
Day