அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா முன்னிலையில் கழகத்தில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் மாவட்டத்தில் திமுக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த பலரும், அக்கட்சிகளில் இருந்து விலகி, புரட்சித்தாய் சின்னம்மா முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தனர்.

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில், கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வந்திருந்த திமுக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சந்தித்தனர். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கழக நிர்வாகி கோபால் ஏற்பாட்டின் பேரில், நாமக்கல் மாவட்ட முன்னாள் திமுக பிரதிநிதி பி.எஸ். ரத்தினம் தலைமையில் திமுக நிர்வாகிகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சிகளில் இருந்து விலகி, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா முன்னிலையில் தங்களை அஇஅதிமுக-வில் இணைத்துக் கொண்டனர். 

Night
Day