அஇஅதிமுக-வின் 53-வது ஆண்டு தொடக்க விழா - நகர்ப்புற வீடற்ற ஏழைகளுக்கு உணவு பரிமாறிய கழக நிர்வாகிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக 53வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, அரியலூர் மாவட்டத்தில் வீடற்ற ஏழைகளுக்கு கழக நிர்வாகிகள் மதிய உணவு வழங்கினர்.

அஇஅதிமுக-வின் 53-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் ஏழை, எளிய மக்களுக்கு கழக நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள நகர்புற வீடற்ற ஏழைகளுக்கான தங்கும் விடுதியில் இருப்பவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் தமிழரசன், குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அனைவருக்கும் உணவுகள் பரிமாறினர். உணவு அருந்திய மக்கள், பல்வேறு உதவிகளை செய்து வரும் கழகத்திற்கு நன்றி தெரிவித்ததுடன், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஆட்சி அமைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Night
Day