அக்னி சாஸ்தா கோவில் வளாகத்தில் மீண்டும் கரடி நடமாட்டம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மீண்டும் கரடி நடமாடும் வீடியோ வெளியாகி மக்களை அதிர்ச்சியடைய செய்தள்ளது. கல்லிடைக்குறிச்சி நெசவாளர் காலனி பகுதி அக்னி சாஸ்தா கோவில் வளாகத்தில் கடந்த மாதம் இரவு நேரத்தில் அவ்வப்போது ஒற்றை கரடி சுற்றி திரிந்தது. இதனையடுத்து வனத்துறையினர் கடந்த 30-ந் தேதி அந்த கரடியை கூண்டு வைத்து பிடித்து மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள அடர் வனப்பகுதிக்குள் விடுவித்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு, அதே கோவில் வளாகத்தில் ஒற்றை கரடி சுற்றித்திரிந்த வீடியோ வெளியாகி உள்ளது. 

Night
Day