அங்கித் திவாரியின் ஜாமீன் மனு வரும் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கனவே திண்டுக்கல் நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் அங்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் மீண்டும் திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பான விசாரணையை வரும் ஐந்தாம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி மோகனா உத்தரவிட்டார்.

Night
Day