அங்கித் திவாரியை விசாரிக்க அனுமதி கோரி தாக்கல் செய்த மனு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமலாக்க துறை அதிகாரி அங்கித் திவாரியை விசாரிக்க அனுமதி கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை விசாரிக்க அமலாக்கத்துறை சார்பில் திண்டுக்கல்  நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், திண்டுக்கல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, அமலாக்கதுறை சார்பில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ண குமார், விஜயகுமார் அமர்வு, வழக்கு விசாரணைக்கு தொடர்புடைய நீதிமன்ற தீர்ப்புகளை தாக்கல் செய்ய அமலாக்கதுறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

Night
Day