அங்கித் திவாரி ஜாமீன் மனு 2 வது முறையாக தள்ளுபடி : உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரியின் ஜாமீன் மனு 2வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது. திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க லஞ்சம் வாங்கியதாக அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் 2வது முறையாக அங்கித் திவாரி மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிகாரிகள் கையூட்டு பெறும் செயல்கள் அதிகரித்திருப்பது தேசத்தின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்றும் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்ற துறைகளில் லஞ்சம் ஊடுருவி உள்ளது என்பது சகித்துக்கொள்ள முடியாது என்று கூறினார். 

Night
Day