அடுக்கடுக்கான கேள்விக்கு பதில் பேச முடியாமல் எம்.எல்.ஏ நழுவி சென்றதால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பேருந்து நிலைய கழிவறையை ஆய்வு செய்ய சென்ற எம்.எல்.ஏ. ரூபி மனோகரனை பொதுமக்கள் முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர். நாங்குநேரி பேருந்து நிலையம் மற்றும் அங்குள்ள கழிவறையை காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் ஆய்வு செய்ய சென்றார். அப்போது அங்கிருந்த சில பெண்கள் பேருந்தே சரிவர இயக்கப்படாத நிலையில், பேருந்து நிலையத்தில் கழிவறை எதற்கு என கேள்வி எழுப்பினர். மேலும், இலவச பேருந்து முறையாக இயக்கப்படுவதில்லை என்றும், அருகில் உள்ள ஊருக்கு செல்லும் பேருந்துக்கே ஒரு மணி நேரமாக காத்திருப்பதாக வேதனை தெரிவித்தனர். பெண்களின் எந்த கேள்விக்கும் வாய் திறக்காமல் நின்ற எம்.எல்.ஏ. ரூபி மனோகரன், சற்று நேரத்திலேயே காரில் புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Night
Day