அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலையின் தீவிரம் குறையும் - இந்திய வானிலை மையம் தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 வடமேற்கு, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலையின் தீவிரம் குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலம் ஃபதேபூரில் 46.2 டிகிரி செல்சியசும், தலைநகர் டெல்லியில் 42.8 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் சில பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலையின் தீவிரம் குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day