அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜரானார். போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறை சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு பதிவு செய்து செந்தில் பாலாஜியை கைது செய்தது. உச்சநீதிமன்ற நிபந்தனை ஜாமின் கொடுத்தநிலையில் மீண்டும் அமைச்சராக செந்தில்பாலாஜி பதவியேற்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மீண்டும் அமைச்சராக செந்தில் பாலாஜி உள்ளதால், சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமின் ரத்து செய்யப்படும் என நீதிமன்றம் எச்சரித்த நிலையில், அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டார். உச்சநீதிமன்ற உத்தரவுபடி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி செந்தில் பாலாஜி கையெழுத்திட்டார். 

Night
Day