அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான சூமோட்டோ வழக்கில் வரும் திங்கட்கிழமை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. 2008-ம் ஆண்டு தமிழக வீட்டு வசதி வாரிய வீட்டை கருணாநிதியின் பாதுகாவலருக்கு ஒதுக்கீடு செய்து முறைகேடு செய்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்தது. இந்நிலையில் இந்த உத்தரவை மறுஆய்வு செய்ய, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். வழக்கின் இறுதி விசாரணை நடத்தப்பட்ட நிலையில், வரும் திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளிக்கவுள்ளார். 

Night
Day