அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியபோது உறங்கிய ஆசிரியர்கள், மாணவர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு கலை கல்லூரியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசும்போது, ஆசிரியர்களும் மாணவர்களும் உறங்கியதால் சலசலப்பு ஏற்பட்டது. திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்றார். தொடர்ந்து மேடையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியபோது, அதனை கவனிக்காமல் ஆசிரியர்களும், மாணவர்களும் உறங்கினர். இதை பார்த்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறிது நேரத்திலேயே உரையை முடித்துக் கொண்டு நடையை கட்டினார். 

Night
Day