அமைச்சர் துரைமுருகனிடம் விசாரணை நடத்த வேண்டும் - அறப்போர் இயக்கம் வலியுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கனிம வளத்துறையில் 700 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதால், அமைச்சர் துரைமுருகன் மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புவியியல் மற்றும் சுரங்க துறையில் நடந்த 700 கோடி ரூபாய் ஊழல் குறித்த ஆதாரங்களையும் புகாரையும், லஞ்ச ஒழிப்புத் துறையில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோரிடம் விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட வேண்டும் என்றும் ஜெயராம் வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார். இதில் பல்வேறு முக்கிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பங்கு இருப்பதாக குற்றம்சாட்டினார்.

Night
Day