அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு - தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

அமைச்சர் பொன்முடி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண்கள் குறித்தும், சைவம் மற்றும் வைணவம் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரி வழக்கறிஞர் ஜெகன்நாத் பொதுநல மனு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை ஜூன் 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Night
Day