அம்மாவின் வழியில் மக்கள் பயணத்திற்காக தூத்துக்குடி விமான நிலையம் சென்றடைந்த அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கழக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-


"அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை" திருநெல்வேலியில் நாளை மேற்கொள்ளவிருக்கும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, இதற்காக, சென்னை "போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தில்" இருந்து புறப்பட்டுச் சென்றபோது, கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் பூங்கொத்துகள் வழங்கி, வழியனுப்பினார்கள். சென்னை விமானநிலைய வரவேற்புக்குப் பின்னர், தூத்துக்குடி விமானநிலையம் சென்ற புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து சாலை வழியே திருநெல்வேலி சென்றபோது, வழிநெடுகிலும் கழக தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு நின்று, சின்னம்மாவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றிடவும், திமுக தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டிடவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை பேணிக் காத்திடவும், அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, அம்பாசமுத்திரம், ராதாபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில், 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை, அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை தொடர்ந்து மேற்கொள்கிறார். இதற்காக, சென்னை போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தில் இருந்து, புரட்சித்தாய் சின்னம்மா, இன்று பிற்பகலில், சென்னை விமான நிலையம் புறப்பட்டார். 

"அம்மாவின் வழியில் மக்கள் பயணம்" புறப்பட்ட கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, கழகத் தொண்டர்கள் பூங்கொத்துகள் வழங்கி வழியனுப்பிவைத்தனர்.

முன்னாள் அமைச்சர் ஆனந்தன், பூவை கந்தன், சோழவரம் ராஜேந்திரன், காளிதாஸ், ராயபுரம் பெருமாள், ராமாபுரம் சேகர், சின்னதுரை, ஸ்ரீ தேவி பாண்டியன், கிருஷ்ணா வெங்கட், மஞ்சுளா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொன்னாடைகள் மற்றும் பூங்கொத்துகள் வழங்கி, புரட்சித்தாய் சின்னம்மாவை அன்புடன் வழியனுப்பிவைத்தனர். 

"அம்மாவின் வழியில் மக்கள் பயணம்" புறப்பட்ட அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சென்னை விமான நிலையம் சென்றடைந்தார். விமான நிலையத்தில் சின்னம்மாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி விமான நிலையம் சென்றடைந்த கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கழக நிர்வாகிகள் பூங்கொத்துகள் கொடுத்தும், கழகக் கொடியினை வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருநெல்வேலி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ராஜகோபால், வழக்கறிஞர்கள் பாலமுருகன், நடராஜன், உதயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்றனர். 'புரட்சித்தாய் சின்னம்மா வாழ்க வாழ்க' என வாழ்த்து முழக்கங்கள் எழுப்பி, மகிழ்ச்சி பொங்க, புரட்சித்தாய் சின்னம்மாவை எழுச்சியுடன் வரவேற்றனர். 

தூத்துக்குடி - திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் உள்ள வல்லநாடு பகுதியில் புரட்சித்தாய் சின்னம்மாவை கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமாக வரவேற்றனர்.

தூத்துக்குடி - திருநெல்வேலி நான்கு வழி சாலையில் பேருந்தில் பயணித்த பள்ளிக் குழந்தைகள், புரட்சித்தாய் சின்னம்மாவை பார்த்ததும், உற்சாகத்துடன் சிரித்து, தங்கள் கைகளை அசைத்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

திருநெல்வேலி மாவட்டம் கே.டி.சி. நகர் பகுதியில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து கழகத் தொண்டர்களும் நிர்வாகிகளும் சின்னம்மாவை வரவேற்றனர். 

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி கழகப் பொறுப்பாளர் வானமாமலை தலைமையில், நெல்லை மாவட்டம் கேடிசி நகர் பகுதியில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சின்னம்மாவுக்கு ஆள் உயர மாலை அணிவித்து, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் எழுச்சியுடன் வரவேற்றனர்.






 

Night
Day