அம்ரித் பாரத் திட்டம் - தமிழகத்தில் 34 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணி தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டில் 34 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணியை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். 

சென்னை, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பல ரயில் நிலையங்களை உலகத் தரத்தில் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆயிரத்து 318 ரயில் நிலையங்கள் இந்த திட்டத்தின் கீழ் தேர்வு  செய்யப்பட்டு கடந்த ஆண்டு 508 ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது 2-ம் கட்டமாக 554 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். இதில், தமிழகத்தில் தெற்கு ரயில்வே சாா்பில் நெல்லை, கும்பகோணம், தென் மேற்கு ரயில்வே சாா்பில் தருமபுரி, ஓசூா் உள்ளிட்ட  34 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

Night
Day