அரக்கோணம் ரயில் நிலைய தண்டவாளத்தில் விரிசல்

எழுத்தின் அளவு: அ+ அ-

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தண்டவாள விரிசலால் பரபரப்பு ஏற்பட்டது.

அரக்கோணம் ரயில் நிலையத்தின் வழியாக சென்னை, பெங்களூர், உள்ளிட்ட பெருநகரங்களுக்கு ரயில்கள் செல்கின்றன. குறிப்பாக  மத்திய அரசின் அம்ரிக் பாரத் திட்டத்தின் மூலம் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயிலில் பயணிகள் ஏறிய போது திடீரென ரயில் தண்டவாளத்தில் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்த ஊழியர் தகவல் கொடுத்த தகவலின் பேரில் ரயில் நிறுத்தப்பட்டு ஆய்வு செய்ததில் தண்டவாளத்தில் விரிசல் விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரை மணிநேர தாமதத்திற்குப்பின் ரயில் வேறு ட்ராக்கிற்கு மாற்றப்பட்டு இயக்கப்பட்டது. 

Night
Day