அரசுப்பள்ளிகளில் நாளை முதல் மாணவர்கள் சேர்க்கை : தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 2024 - 25ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை நாளை முதல் தொடங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை அனைத்து அரசு பள்ளிகளிலும், 5 வயது பூர்த்தி அடைந்த சிறார்கள் மற்றும் பள்ளி வயதுடைய மாணவர்களை நாளை முதல் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தி, ஆசிரியர்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும், மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.  

Night
Day