அரசுப்பள்ளி சமையல் கூட சுவரில் மனித கழிவு கலந்த விவகாரம் - தனிப்படை அமைத்து விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சமையல் கூட சுவரில் மனித கழிவு வீசிய  விவகாரத்தில் 8 பேர் கொண்ட தனிப்படையினர் மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் சத்துணவு செய்யும் சமையல் கூட சுவற்றில் மனித கழிவு வீசியெறியப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 8 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Night
Day