அரசுப் பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ வைரல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரசு பள்ளியில் கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலூர் அடுத்த கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள பட்டூரில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 9 ஆசிரியர்களை கொண்ட இந்த பள்ளியில் மேலூரைச் சேர்ந்த பாப்பா என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாணவர்கள் சிலர் அந்தப் பள்ளியின் கழிவறையை சுத்தப்படுத்தும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது....

இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் பாப்பாவிடம் கேட்ட போது, பள்ளியின் மேலாண்மை குழு தலைவராகவும், அதே பள்ளியில் காலை சிற்றுண்டி தயார் செய்பவருமான கவிதா தன் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக, மாணவர்களை கொண்டு கழிவறையை சுத்தம் செய்து, அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.


தலைமையாசிரியர் பள்ளி குழந்தைகளிடம் நேரடியாக விசாரித்த போது, தாங்கள் அன்று ஒரு நாள் மட்டும் தான் கழிவறையை சுத்தம் செய்ததாகவும், தங்களை சுத்தம் செய்ய சொல்லி பள்ளியில் காலை சிற்றுண்டி தயார் செய்யும் கவிதா என்பவர் போட்டோ எடுத்ததாகவும் மாணவர்கள் கூறியதாக தெரிவித்தார். 



Night
Day