அரசுப் பேருந்து மீது லாரி மோதி விபத்து : 10 பயணிகள் காயம் - சிகிச்சை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி அருகே அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில், காயங்களுடன் மீட்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டோர் பயணிகள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சூரக்குடி பட்டியிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 30 பயணிகளில் காயங்களுடன் மீட்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் சில பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்தால் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Night
Day