அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு : வரும் 28-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வுக்கு வரும் 28ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியருக்கான 4 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தேர்வெழுத விரும்புவோர் ஆன்லைன் மூலம் வரும் 28ம் தேதி முதல் அடுத்த மாதம் 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி தேர்வு நடைபெறலாம் என்றும் உத்தேச தேதியையும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

Night
Day