அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீண்ட நேரம் ஏற்பட்ட மின்தடை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டதால் மருத்துவர்கள், நோயாளிகள் பெரும் அவதியுற்றனர். ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அண்மையில் புதிதாக கட்டி திறக்கப்பட்டது. இந்நிலையில் இங்கு அதிகாலையில் 2 மணிநேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இங்குள்ள ஜெனரேட்டரும் இயக்கப்படாததால், உள்நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் மின்சாரமின்றி அவதியுற்றனர். அவ்வப்போது மருத்துவமனையில் மின்தடை ஏற்படுவதால், அந்நேரத்தில் ஜெனரேட்டர்களை இயக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

varient
Night
Day