அரியலூர்: அடிப்படை வசதிகளை செய்து தராத திமுக அரசை கண்டித்து போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அடிப்படை வசதிகளை செய்து தராத திமுக அரசை கண்டித்து வீடுகளில் கருப்புகொடி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தா.பழூர் முதல்நிலை ஊராட்சிக்குட்பட்ட கூத்தங்குடி கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த இரண்டு வருடங்களாக குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அதிகாரிகள் செய்து தரவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், எதிர்வரும் மக்களவை தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Night
Day