ஆகாயத்தாமரை சூழ்ந்த பெருங்களத்தூர் ஏரியை தூர்வார கோரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பெருங்களத்தூர் ஏரி முழுவதும் சூழ்ந்த ஆகாயத்தாமரையை அகற்ற தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்‍கை எடுக்‍க வேண்டுமென கோரிக்‍கை எழுந்துள்ளது. தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருங்களத்தூர் ஏரி செங்கல்பட்டு மாவட்டத்திற்கான குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்தநிலையில் ஏரி முழுவதும் ஆகாய தாமரையால் சூழப்பட்டு உள்ளதுடன் ஏரியை தூர்வாராததால் மிக்ஜாம் புயலின் போது பெருங்களத்தூர் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு முடிச்சூர் மற்றும் அதன் சுற்றுப்புற குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. ஏரியில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றாததால் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். 

Night
Day