ஆசிரியர்கள் போராட்டம் குறித்த கேள்வியால் கோபமடைந்த அமைச்சர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதால் கோபமடைந்த அமைச்சர் அன்பில் மகேஷ், செய்தியாளர் சந்திப்பை நிறுத்திக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் தெற்காசிய நாடுகளில் உயர் கல்வி எப்படி சேர்வது என்பது குறித்த விளக்க கருத்தரங்கம்  சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்குபின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 12ஆம் தேதி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் மீண்டும் போராட்டம் நடத்துவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டதால் ஆத்திரமடைந்த அன்பில் மகேஷ், இந்த நிகழ்ச்சியை மட்டும் பற்றி பேசுங்கள் என கூறிவிட்டு உடனடியாக செய்தியாளர் சந்திப்பை நிறுத்திவிட்டு புறப்பட்டார். 

Night
Day