ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் லிப்ட் பழுதானதால் நோயாளிகள் அவதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் லிப்ட் பழுதானதால் மூன்று நாட்களாக நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். ஆத்தூர் நகர மைய பகுதியில்  மாவட்ட அரசு தலைமை  மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்நிலையில் கடந்த மூன்று 3 நாட்களாக  லிப்ட் பழுதாகி இயங்காமல் இருப்பதால்  மருத்துவமனையில் தங்கி  சிகிச்சை பெற்று வரும்  நோயாளிகள் மூன்று மாடி கட்டிடத்தில் படிக்கட்டு வழியாக செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Night
Day