ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் 49 ஆயிரத்தை கடந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து 49 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து 5 நாட்களாக ஏறுமுகத்தில் காணப்படுகிறது. நேற்று சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து, 49 ஆயிரத்து 200 ரூபாய்க்குக்கும், கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து 79 ரூபாய் 20 காசுகளுக்கும், கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து 79 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 760 ரூபாய்க்கு உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Night
Day