ஆம்னி பேருந்தில் ரூ.2 கோடி பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐதராபாத்தில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி ஆம்னி பேருந்தில் சென்னை கொண்டுவரப்பட்ட 2 கோடி ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை மாதவரம் வந்த அந்த பேருந்தில், எளாவூர் சோதனை சாவடி போலீசார் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக இருந்த அட்டை பெட்டியில் 2 கோடி ரூபாய் அளவுக்கு 500 ரூபாய் நோட்டு கட்டுகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ஐதராபாத்தில் இருந்து ராஜஸ்தானை சேந்த பக்தாராம் என்பவர் அட்டை பெட்டியை அனுப்பியதாக பேருந்து ஓட்டுனர் போலீசாரிடம் கூறினார். அட்டை பெட்டியில் இருந்த முகவரியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்ட போலீசார், பேருந்து பழுதானதால் கும்மிடிப்பூண்டியில் வந்து பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறியதை அடுத்து, அங்கு வந்த சூரஜ் பூரி என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சென்னையில் வீட்டுமனை வாங்குவதற்காக பணம் அனுப்பப்பட்டதாக சூரஜ் பூரி கூறினார். எனினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை வருமானவரி துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். 

Night
Day