ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங். நிர்வாகி அஸ்வத்தாமன் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பெரம்பூரில் கடந்த மாதம் 5ம் தேதி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பொன்னைபாலு உட்பட 21 பேர் கைதான நிலையில், திருவேங்கடம் என்ற ரவுடியை போலீசார் என்கவுண்டர் செய்தனர். இந்நிலையில் வழக்கு தொடர்பாக வடசென்னை ரவுடி நாகேந்திரனின் மகனும், வடசென்னை மாவட்ட காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகியுமான வழக்கறிஞர் அஸ்வத்தாமனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். 3 நாட்களாக விசாரணை நடத்தப்பட்டு வந்தநிலையில், அவரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அஸ்வத்தாமனை நீக்கி காங்கிரஸ் கட்சி உத்தரவிட்டுள்ளது.

Night
Day