ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - வழக்கறிஞர் ஹரிஹரனிடம் தீவிர விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்போ செந்தில் தொடர்பாக ஹரிஹரன் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியானது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் ஹரிஹரனை 5  நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அதில், ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தொடர்புடைய கொலையாளிகளுக்கு பணம் கொடுத்தவர்கள் யார்? என்றும் வெவ்வேறு எண்களில் இருந்து விபிஎன், இன்ஸ்டா, whatsapp call-களில் மட்டுமே தொடர்பு கொண்டு, கொலையை எந்த பிரச்சினைகளும் இல்லாமல் எப்படி கச்சிதமாக செய்ய வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை அவ்வபோது சம்போ செந்தில் வழங்கியதாகவும் ஹரிஹரன் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் சம்போ செந்தில் எங்கெங்கு தங்குவார்? என ஹரிஹரனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day