ஆரணியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நூறுநாள் வேலையில் சம்பளம் குறைவாக வழங்கப்படுவதை கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

கல்லேரிபட்டு கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு தினக்கூலியாக 150 முதல் 260 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வெறும் 29 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பெண்கள் பணிதள மேற்பார்வையாளரிடம் கேட்டபோது அவர் ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள், முறையாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

Night
Day