ஆரணி - ஏரியில் குளிக்கச் சென்ற 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 4 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடையபுலம் கிராமத்தில் வசித்து வரும் இரண்டு குடும்பங்களை சேர்ந்த 4 சிறுவர்கள், பள்ளி விடுமுறை தினம் என்பதால், ஓடைதாங்கல் ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் நீண்ட நேரமாகியும் ஏரியில் இருந்து வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. பின்னர், ஏரிக்கரையில் சிறுவர்களின் உடைகளை பார்த்த கிராம மக்கள், உடனடியாக ஏரியில் இறங்கி 4 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு, நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்களின் உடல்களை கிராம மக்கள் மீட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day