ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதிக்ககோரி மீனவர்கள் 3வது நாளாக தொடர் வேலைநிறுத்தம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி விசைப்படகு மீனவர்களுக்கு ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதி அளிக்காத மீன்வளத் துறையை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் 3வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 270 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி வழங்கக்கோரி அவர்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்திய பின்னர், கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதுநாள் வரை மீன்வளத்துறையினர் அனுமதியளிக்காததை கண்டித்து கடந்த 10ம் தேதி முதல் விசைப்படகு மீன்வர்கள்  தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பல கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.

Night
Day