இசைஞானி இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி காலமானார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இளையராஜாவின் மகளும் பிரபல பாடகியுமான பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

இளையராஜா இசையமைத்த ராசய்யா திரைப்படத்தில் 'மஸ்தானா மஸ்தானா' என்ற பாடல் மூலம் அறிமுகமாகி  பல்வேறு  பாடல்களை பாடி பிரபலமானவர் பின்னணி பாடகி பவதாரிணி. 'மயில் போல பொண்ணு ஒண்ணு' பாடலுக்காக தேசிய விருது பெற்ற அவர், தனது தனித்துவமான குரல் மூலம் பல்வேறு பாடல்களை படி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். பாடகியாக மட்டுமின்றி  தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட திரைப்படங்களுக்கு இசை அமைத்தும் உள்ளார். 

47 வயதான  பவதாரிணி, கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 6 மாத காலமாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், அவரது உடல் இலங்கையில் இருந்து இன்று சென்னை கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Night
Day