எழுத்தின் அளவு: அ+ அ- அ
மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இதயம் கனிந்த விஷூ திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள விஷு திருநாள் வாழ்த்துச் செய்தியில், மலையாள மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக விளங்கும் "விஷு" திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த விஷூ திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
வாழுகின்ற இடங்களில் எல்லாம் தங்கள் பண்பாட்டையும், பாரம்பரிய மரபுகளையும் விடாது பேணிப் பராமரிக்கும் மலையாள மக்கள், விஷு பண்டிகையன்று அதிகாலையில் எழுந்து விஷூக்கனி கண்டு புத்தாண்டில் எல்லா வளமும், நலமும் பெற்று மகிழ்ச்சியான ஆண்டாக அமைய வேண்டி இறைவனை மிகுந்த பக்தியுடனும், நம்பிக்கையுடனும் வழிபடுவார்கள் - இந்நன்னாளில் குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து தங்கள் உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களை அன்போடு உபசரித்து அவர்களுக்கு அறுசுவை விருந்தளித்து மகிழ்வதை மலையாள மக்கள் பாரம்பரியமாக தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
இந்தப் புத்தாண்டு மலையாள மக்களின் வாழ்வில் இனிமையும், அமைதியும், இன்பமும் இல்லந்தோறும் கொழிக்கின்ற ஆண்டாக மலரட்டும் என ஆண்டவனை வேண்டி, என் அன்பிற்குரிய மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை விஷூ திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.